ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 92
weblink
பாடல்: 92
கற்பிதமாம் ஜீவபர
உபாதி யெல்லாம்;
களங்கமற விசாரித்து
நேதி செய்து;
தற்பத லட்சியமான
பிரம்ம ரூபம்;
த்வம்பத லட்சியமான
நாமே என்று;
நிர்பயமாய் அகண்டார்த்த
போதம் பெற்று;
நீக்க வொண்ணா பவபந்தம் அனைத்தும் நீக்கி;
அற்பமில்லா அகண்டார்த்த வடிவேயாகி;
அசஞ்சலமாய் ஆன்மாவில்
அமர்ந்து நிற்பாய்!
கருத்து:
மனோமய கற்பனையான
நாம, ரூப, ஜக, ஜீவ ஈஸ்வராதிகள் என்றும், லௌகீகம், தெய்வீகம்,
பரமார்த்தீகம் என்றும், துவைதம், விஷிஸ்டாத்வைதம்,
அத்வைதம் என்றும்,
விமர்சிக்கும் அனேகவித
பேதாபேதங்களையும் ஒழித்து விட்டு, எல்லாம் ஒன்றே! அது ஆனந்த சுக சொரூபமே !
அதுவே நாம்! நாமே அது! என
அகண்டபாவனையில் மயமாவாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 92