ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 65

weblink



பாடல்: 65

நினக்கயல் போல் தோன்றிய
இந்த நாமரூபம்;
நிகிலமுமே நீயலது
வேறேயன்று!
தமக்கயல்போல் தோன்றிய
இந்த நாமரூபம்;
தாமலது சோதிக்கின்
வேறே உண்டோ!
எமக்கயல் போல் காண்பதெல்லாம் யாமே என்றும்;
யாம் தானே ஏகபரப்
பிரம்ம மென்றும்;
உன் மனக் கவலை யாவையுமே
தீரு மட்டும்;
மறவாமல் எப்போதும்
நிதித்யாசிப்பாய்!

கருத்து:

உன் மனோமய கற்பனையினால், தற்காலிகமாகத் தோற்றியிடும் இந்த நாமரூபஜகம், காலாதீத, அந்த ஒன்றாகிய, அதன் அம்ஸமாகிய உன் சொரூபமே! ஆகவே, எந்த வினாடியும், பரபாவனையாகிய யாமே அது! அதுவே நாம்! என சிந்தித்து சிந்தித்து உன் மனக்கவலையை போக்குவாயாக!

                           எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 65
 

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113