ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 55
weblink
பாடல்: 55
இல்லையென இயம்பியிடும் பொருளுமின்றி;
இங்குளது என்றியம்பியிடும் பொருளுமின்றி;
சொல்லியிடும் சொற்பொருளோர் அணுவுமின்றி;
சும்மாவே இருந்து
மஹா மௌனியாகி;
அல்லலில்லா அகண்ட
பராநந்தம் மேவி;
அனாதிபவ துக்கங்கள்
அனைத்தும் தீர்ந்து;
கல்வெனவே திடமான
பர ஞானத்தால்;
கற்பனையோ ரணுவுமில்லா
முத்தி சார்வாய்!
கருத்து:
காலாதீத பரவஸ்துவை,
இல்லை என்று சொல்லவும் முடியாது! சொல்லவும் கூடாது!
அதை உண்டு என சொல்லவும் முடியாது! சொல்லவும் கூடாது!
அங்கு சொல்வாரும் இல்லை; செல்வாரும் இல்லை; கொள்வாரும் இல்லை! விளக்க எவருமே இல்லை!
அது தான் தானாய் தனித்து ஸ்வயமாக சுகமாக இருக்கும் ஒன்றாகும்.
இதற்கு ஒரே வழி உண்டு!
அதுவே நாம்! நாமே அது! என கருங்கல்லைப் போல்,
சும்மா இருப்பாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 55