ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 50

weblink

பாடல்: 50

கால முதல் கற்பனையே இலாமையாலே;
காண்கின்ற காட்சி முதல் இருப்பதெங்கே?
தூல முதல் காத்திரமே
இலாமையாலே;
தொடர்கின்ற பவபந்தம்
இருப்பதெங்கே?
மூலமதாம் அஞ்ஞானம்
இலாமையாலே,
முளைக்கின்ற அதன் செய்கை
இருப்பதெங்கே?
ஆலயமாம் பரப்பிரம்மம்
அனைத்தும் என்றும்;
அதுதானே அகமென்று அனுசந்திப்பாய்!

கருத்து:

காலம் கடந்த ஒன்றுக்கு, மனோமய கற்பனையால் நாம ரூப காட்சிகளை எவ்வாறு கொடுக்க முடியும்?

மனோமய கற்பனையான தூலமாகிய பாத்திரத்தில், வல்வினை தொல்வினை, தொடர்வினை என்ற பவம் எப்படி சூழும்?

யோகமாயாவோ! லோகமாயாவோ!
விஷ்ணுமாயாவோ ! எந்த எந்த மூலமும் இல்லவே இல்லையே? அதன் செய்கை எவ்வாறு தொடரும்?

பரப்பிரம்மம் ஒன்றைத்தவிர, வேறு எதுவும் இல்லவே இல்லை! 

அதுவே யாம்! யாமே அது! என அமர்க!                                   
                         
                        எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 50

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 130