ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 44
weblink
வலியுள்ள தீரர்
நாரிமுதல் சுகத்திச்சை
பண்ணும் போதும்
பற்பலவாய் தோன்றிய
அந்தசுகத்தை எல்லாம்
பரப்பிரம்ம சொரூபசுகம்
எனவே ஓர்ந்து
கற்பிதமாம் விஷய சுகம்
அனுபவிக்க
கனவிலுமே கருதாது
தைரியத்தோடு
அற்பமில்லா அகண்டபர
சுகமே சேர
அகண்டபர ஞானபலம்
அடைய வேண்டும்!
கருத்து:
சம்ஸாரியான குடும்பஸ்தர்கள் பரஸ்திரீ போகம் அவஸ்யம் கூடாது. தன் மனைவியிடம் போகம் அனுபவிக்கும் போதும் அங்கங்களை காம எண்ண கற்பனை பண்ணாமல், இது ஸ்ரீ பகவான் காரியமே என, உணர்வுடன், போதும் ஐயனே போதும், இந்த ஜனன மரண சம்பந்த விபரீத விளையாட்டு என மனமுருகி வேண்டி நடந்தால் வினையும் அதன்
காரியமும், சீக்கிரம் முடிய அவன் கிருபை செய்வான். எண்ண அழுத்தமே பாவம். அக்காரியம் பாபமல்ல.
எல்லாம் நீ!