ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129
weblink பாடல்: 129 இன்றடியேன் உம்மை நோக்கி வணங்குவோமேல்; இரண்டுபடும் ஆதலினால் அதுவும் கூடா(து)! அன்றி எமை நோக்கி யாம் வணங்குவோமேல்; அணுகுபலன் இலாமையினால் அதுவும் கூடா(து)! என்றும் ஓர் வடிவான உம்மை நோக்கி; இருமையுற யாம் இன்று வணங்குவோமேல்; நின்ற எம்மை அஞ்ஞானியென நீ சொல்வாய்! நிர்மலமாம் தன்னிலையில் இருமை உண்டோ? கருத்து: ஓ எம் ஐயாவே! பரிபூரண மெய்யனே! ஆனந்த தூயனே! உம்மை எப்படி யாம் வணங்க முடியும்? எனத் தெரியவில்லையே? இப்போது யாம் உம்மை வணங்கினால், அங்கு இரண்டுபடும். ஆகவே இயலவில்லை! நீயே யாம்! யாமே நீ! என ஐக்கியமான பின்பு, யாரை யார் வனங்குவது? யார் அவ்வணக்கத்தை ஏற்பது? வணக்கம், வந்தனம், உபசாரம், உபகாரம், இவை அனைத்தும் இரண்டு என்ற துவைத நிலையில்தான், ஒருவர் செய்ய ஒருவர் ஏற்க, வாய்ப்பு உண்டு. இங்கு இருவரைக் காணோமே! ஒருவர் என்ற இருப்பும் மறைந்து வருகிறதே பிரபோ? உலக நிலையோ, தெய்வ நிலையோ, பலன் இல்லாமல், மேலே கூறிய நிலையில், எவரும் செய்ய மாட்டார்கள். இங்கோ பலமும் (சக்தியும்) இல்லை! பலனும் (ஒர் பொருளும் - வியாபாரமும்) இல்லை! இது என்ன ஆச்சர்யம்? யாம் தான், எப்படியும், நீர் ஸ்...